Thursday, April 9, 2020

என்னை கல்யாணம் பண்ணிக்கரியா?

மாலை நேரம். கோவிலில் ரொம்ப கூட்டம் இல்லை. குளத்து படித்துறையில் அமர்ந்தபடியே அவளோடு பேசிக்கொண்டு இருந்தான் வருண்.  சூரியன் பைபை சொல்ல ரெடியாக இருந்தது. இருவர் மனதில் இருந்த காதல் சூரியனுக்கு புரிந்திருக்க வேண்டும். வானத்தில் வண்ண கோலம். சற்று நேரம் இருந்து பார்த்துவிட்டு போவோம் என்பது போல் மேகத்தின் ஊடே ஒளிந்து வேடிக்கை பார்த்தது.

வருண் அவன் மனதில் இருந்த காதலை இன்னும் சொல்லவில்லை. சொல்ல தெரியவில்லை. ஒருவேளை அவன் காதலை சொல்லிவிட்டால் என்ன பதில் சொல்வது என்று ஸ்வாதீக்கு புரியவில்லை. குழப்பமான நிசப்தம் அங்கு நிலவியது.

எத்தனையோ காதல் வசனங்கள் மனப்பாடம் ஆன வருணுக்கு சற்றென்று எதுவும் நினைவுக்கு வரவில்லை. இந்த தனிமை மீண்டும் கிடைக்குமா? சந்தேகம் தான்.

"சரி, வீட்டுக்கு கிளம்பறேன். ரொம்ப நேரம் ஆச்சு", ஸ்வாதீ தயக்கத்துடன் புறப்பட தயார் ஆனாள். 

"இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன", பாடல் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. 

அவளை உற்று பார்த்தான். இவள் தான் என்னுடையவள் என்பதில் சந்தேகமே இல்லை அவனுக்கு. ஆனால் அவளுக்கு நான் அப்படியா? தெரியவில்லை. எப்படி கேட்பது என்றும் புரியவில்லை.

அரை முட்டி போட்டு ஒரு வைர மோதிரம் வைத்து காதலை சொல்ல ஆசை தான்.  மாறாக, அவன் வாயிலிருந்து வந்தது என்னவோ, "என்னை கல்யாணம் பண்ணிக்கரியா?" என்ற கேள்வி மட்டும் தான்.

இதை கேட்டதும் ஸ்வாதீக்கு அவன் கையில் தாலி வெச்சிறுக்கானோ என்று பயம். இருவர் முகத்திலும் ஒரு அசட்டு சிரிப்பு. 

சூரியன் தலையில் அடித்து கொண்டு மறைந்தது.

No comments:

Post a Comment

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...