Saturday, November 16, 2019

(ரயிலின்) உள்ளே வெளியே

"வண்டிய சீக்கரம் எடுத்துடுவான். கீழே இறங்காதீங்க." ஸ்டேஷன் வருவதற்கு இன்னும் சிறிது நேரம் இருக்கும்போதே தாமரை கணவனை எச்சரித்தாள்.

கார்த்திக்கு கொள்ளை பசி. ஏதாவது சாப்பிடனும். இறங்காமல் எப்படி? "அதெல்லாம் ஒன்னும் ஆகாது. கவலை படாதே. நா டக்குன்னு போய் ஏதாவது வாங்கிண்டு வந்துடுவேன். நீ உள்ளேயே இரு", என்று சொல்லிவிட்டு கதவை நோக்கி நகர்ந்தான்.

ஒரு மலை பாம்பு மெதுவாக குகைக்குள் புகுவது போல அந்த ட்ரெயின் நடைமேடையில் நுழைந்தது. வண்டி நிற்பதற்குள் கார்த்திக்கின் தேர்ந்த கண்கள் அந்த மொத்த ஸ்டேஷன்ல இருந்த ஒரே சாப்பாடு ஸ்டாலை கண்டு பிடித்துவிட்டது. சடாரென இறங்கி சாப்பிடுவதற்கு என்ன இருக்குனு பாக்க வேகமா ஓடினான்.

தாமரைக்கு இருப்பு கொள்ளலை. ட்ரெயின்ல போறதுனாலே ஒரு பயம் அவளுக்கு. திடீர்னு எடுத்துட்டான்னா, பேரு தெரியாத ஊர்ல மாட்டிண்டு என்ன செய்யறதுனு கவலை. ஸ்டேஷன் மாஸ்டர் மணி அடித்து பச்சை கோடி காட்டுவதற்கு தயாராக இருந்தார். கார்த்திக் எங்கேனு ஒன்னும் தெரியல. என்ஜினை விட அவளது இதய துடிப்பு பெருசா இருந்துது.

கதவை நோக்கி நகர்ந்தாள். கண்ணுக்கு எட்டின தூரம் வரை கார்த்திக்கை காணவில்லை. ரயில் கிளம்பியே  விட்டது. நடைமேடை விட்டு வேகம் பிடிப்பதற்குள் சட்டென்று கீழே குதித்தாள். ரயில் மெல்ல வேகம் பிடித்தது.

கோபமாக அந்த சாப்பாடு ஸ்டாலை நோக்கி விரைந்தாள். "தாமரை!" எங்கிருந்தோ குரல் கேட்டது. ஐந்து கம்பார்ட்மெண்டுகள் தாண்டி கார்த்திக் விரைந்து செல்லும் அந்த ரயிலின் உள்ளே இருந்தான், சூடா வாங்கின சாப்பாடு பொட்டலத்தோடு.

Monday, November 4, 2019

'வாழ நினைத்தால் வாழலாம்' கதை விமர்சனம்

தினமலர் வாரமலரில் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி வருடா வருடம் நடைபெறுகிறது. 32 வது அண்டான இவ்வருடம் 'வாழ நினைத்தால் வாழலாம்' என்ற சிறுகதைக்கு முதல் பரிசாக Rs.20,000 என்று அறிவித்தனர். சரி கதை எப்படி என்று பார்ப்போம்னு படிச்சேன். 
 
ஒரு ஸ்கூல் டீச்சர் +2 படிக்கும் மாணவ மாணவியரை பொதுத்தேர்வு முடிந்தவுடன் வீட்டிற்கு அழைத்து விருந்து உபச்சாரம் செய்வதாக கதை. எதற்கு என்றால் பொது தெரிவில் அவர்கள் வெற்றி பெறாவிட்டால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதை தடுப்பதற்காக என்று சொல்லி கதையை முடித்துள்ளார் கதையின் ஆசிரியர், திரு எம் ராமசாமி. நோக்கம் உயர்ந்தது தான். ஒரு ஆசிரியர் வெறும் பாடம் நடத்துவது மட்டுமே  தன் கடமை என்று இல்லாது தோல்வியுறும் மாணவர்களை தளர்வடைய விடாமல் மேலும் முனைப்போடு வெற்றிப்பாதையை நோக்கி நகர செய்வதும் தனது கடமையே என உணர்தல் மிக அவசியம். ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் தோல்வி அடைவதும், அதில் பலர் தற்கொலைக்கு முயல்வதும் வேதனையான ஒரு விஷயம். 
 
இங்கு யாரும் தோல்வியை விரும்புவதில்லை. உண்மை தான். அனால், விதி ஒரு சிலருக்கு வெற்றியை அவ்வளவு எளிதாக பரிசளிப்பதில்லை. தகுந்த வழிகாட்டி ஒவ்வொருவருக்கும் அவசியம், அதிலும் குறிப்பாக தோல்வியுறும் மாணாக்கர்களுக்கு மிக அவசியம். சரியான கதைக்கு முதல் பரிசளித்த தினமலர் பொறுப்பாசிரியருக்கு நன்றி.

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...