Friday, April 24, 2020

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன்.

"உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கேள்வி.

சமீபத்தில் தான் லாக்டௌன் சமயத்தை உருப்படியா கழிப்பதற்கு மழலையும் மனையாளும் ஒரு புது மொழியை ஆப் மூலமாக கற்றுக்கொள்வதாக சொன்னாள். 

மனைவியை அஸத்த இது ஒரு நல்ல தருணம் என்று யோசித்து உடனே கூகலை திறந்து வைத்து "ஸ்பெல்லிங் சொல்லு பாப்போம்" என்றேன்.

"ஐயைய, அப்பாக்கு "க்நிஃபெ"னா என்னன்னு தெரியலைடா" என்று சொல்லி மழலையும் மனையாளும் சிரித்தார்கள்.

அப்படி என்னவா இருக்கும்னு யோசிச்சிண்டு இருக்கும் போது, மனையாள் மழலை படித்த ஸ்பெல்லின்கை ரசித்தபடியே சொன்னாள்:

KNIFE

Thursday, April 9, 2020

என்னை கல்யாணம் பண்ணிக்கரியா?

மாலை நேரம். கோவிலில் ரொம்ப கூட்டம் இல்லை. குளத்து படித்துறையில் அமர்ந்தபடியே அவளோடு பேசிக்கொண்டு இருந்தான் வருண்.  சூரியன் பைபை சொல்ல ரெடியாக இருந்தது. இருவர் மனதில் இருந்த காதல் சூரியனுக்கு புரிந்திருக்க வேண்டும். வானத்தில் வண்ண கோலம். சற்று நேரம் இருந்து பார்த்துவிட்டு போவோம் என்பது போல் மேகத்தின் ஊடே ஒளிந்து வேடிக்கை பார்த்தது.

வருண் அவன் மனதில் இருந்த காதலை இன்னும் சொல்லவில்லை. சொல்ல தெரியவில்லை. ஒருவேளை அவன் காதலை சொல்லிவிட்டால் என்ன பதில் சொல்வது என்று ஸ்வாதீக்கு புரியவில்லை. குழப்பமான நிசப்தம் அங்கு நிலவியது.

எத்தனையோ காதல் வசனங்கள் மனப்பாடம் ஆன வருணுக்கு சற்றென்று எதுவும் நினைவுக்கு வரவில்லை. இந்த தனிமை மீண்டும் கிடைக்குமா? சந்தேகம் தான்.

"சரி, வீட்டுக்கு கிளம்பறேன். ரொம்ப நேரம் ஆச்சு", ஸ்வாதீ தயக்கத்துடன் புறப்பட தயார் ஆனாள். 

"இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன", பாடல் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. 

அவளை உற்று பார்த்தான். இவள் தான் என்னுடையவள் என்பதில் சந்தேகமே இல்லை அவனுக்கு. ஆனால் அவளுக்கு நான் அப்படியா? தெரியவில்லை. எப்படி கேட்பது என்றும் புரியவில்லை.

அரை முட்டி போட்டு ஒரு வைர மோதிரம் வைத்து காதலை சொல்ல ஆசை தான்.  மாறாக, அவன் வாயிலிருந்து வந்தது என்னவோ, "என்னை கல்யாணம் பண்ணிக்கரியா?" என்ற கேள்வி மட்டும் தான்.

இதை கேட்டதும் ஸ்வாதீக்கு அவன் கையில் தாலி வெச்சிறுக்கானோ என்று பயம். இருவர் முகத்திலும் ஒரு அசட்டு சிரிப்பு. 

சூரியன் தலையில் அடித்து கொண்டு மறைந்தது.

Wednesday, April 8, 2020

நீங்க தனியா வந்துருக்கீங்களா சார்?

குறிஞ்சியையும் முல்லையையும் பின் தள்ளியவாறு அந்த ரயில் வேகமாக அதன் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருந்தது. சைட் லோயர் பேர்த்தில் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

"நீங்க தனியா வந்துருக்கீங்களா சார்?", என்று ஒரு குரல்.

கவனம் கலைய, குரல் வந்த திசை நோக்கி பார்த்தேன். சுமார் ஏறக்குறைய என்னுடைய வயது தான் இருக்கும். அருகில் அவன் மனைவி போலும். புதிதாக கல்யாணம் ஆகி இருக்க வேண்டும். அந்த பெண்ணின் கழுத்தில் பளிச்சென்று மஞ்சள் கயிறு.

"ஆமாம்", என்று சொல்லி ஏன் என்பது போல் புருவத்தை உயர்த்தினேன்.

"நமக்கு சைட் அப்பர். இன்னொரு பேர்த் சைட் லோயர் தான், ஆனால் ரெண்டு கோச் தள்ளி குடுத்துருகாங்க. நீங்க தப்பா எடுத்துக்கலனா  உங்க சீட்ட மாத்திக்கறீங்களா?

ரெண்டுமே சைட் லோயர் தானே, என்ன பெரிய வித்தியாஸம்? மலையும் வயலும் ஒரு ரெண்டு நொடி தள்ளி தெரியும். அவ்வளவு தான்."சரி" என்று ஒத்துக்கொண்டேன். 

எனது பையை எடுத்து கொண்டு புதிய இருக்கையை அடைந்தேன். மழைக்காலம் அப்போது தான் முடிந்திருந்தது. மலையும் வயலும் எல்லா பக்கமும் பச்சை பசேல் என்று மிகவும் ரம்மியமாக இருந்தது. ஒருபுறம் இயர்க்கையின் அழகை ரசித்தபடியே அருகில் நோட்டம் விட்டேன். 

சற்று வயசானவர். கூட அவரது மகளாக இருக்கணும். இருவரும் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். "கவலை படாதீங்க அப்பா. பக்கத்து கோச்ல தான் இருக்கேன். அடிக்கடி வந்து பாத்துட்டு போறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க.", மகளின் பேச்சை கேட்டு சற்று யோசித்தவாறே என்னை பார்த்தார்,

"நீங்க தனியா வந்துருக்கீங்களா சார்?"

--------------------
Click here to read this story in English.

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...