Saturday, May 19, 2018

காக்கா வடை வாங்கிய‌ கதை

"அப்பா, அந்த காக்கா வடை சுட்ட கதைய திரும்ப‌ சொல்லு", எனது மழலை கேட்டாள்.

"ஏதுக்கு டா?" என்று கேட்டேன். "இன்னும் ஒன் டைம் மட்டும் சொல்லுப்பா ", என்று கொஞ்ச‌லாய் கெஞ்சினாள்.

சரி என்று மறுபடியும் பாட்டி வடை சுட்டதில் ஆரம்பித்து கதை சொல்லி முடித்தேன். ஒரு கனம் யோசித்து பின் கவலை முகத்தோடு இருப்பதை கண்டு "என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.

"அந்த காக்கா பாவம். அதுக்கு பசிக்குமே!" என்றாள்.

"என்ன பன்றது? நரி பேச்ச கேட்டு ஏமாந்து போச்சு".

"நரிகிட்டேந்து அந்த வடைய காக்கா கிட்டயே வாங்கி குடுத்துடலாம்", என்று ஐடியா சொன்னாள்.

"அப்படி பன்னினா நரிக்கு பசிக்குமே?" என்றேன். கொஞ்சம் யோசித்துவிட்டு பின், "நரி இன்னோரு வடைய பாட்டிகிட்டேந்து எடுத்துக்கட்டுமே", என்று  இன்னொரு ஐடியா குடுத்தாள்.

எவ்வளவு தூரம் போறதுன்னு பாப்போம்னு யோசிச்சு அவளிடம் கேட்டேன், "பாட்டி பாவம். ஏற்கனவே காக்கா ஒரு வடைய எடுத்துண்டு போய்டுத்து. இப்போ நரியும் ஒரு வடைய‌ எடுத்துண்டு போச்சுனா பாட்டி கடைல வடையே நிறைய‌ இருக்காது. வடைய வித்தா தானே பாட்டிக்கு காசு கிடைக்கும்? அப்போ தானே ஏதாவது வாங்க முடியும்?"

"பாட்டிக்கு நம்ம காசு குடுத்துடலாம்", என்று சட்டென்று சொல்லி சிரித்தாள்.

Tuesday, May 1, 2018

கதைய மாத்தி சொல்லிட்டா...

"சொல்லுப்பா, ஒரு ஊர்ல என்ன ஆச்சாம் ?".

என் மழலை இப்படி ஆரம்பித்தால் உடனே கதை சொல்லிவிட வேண்டும். இல்லையேல் அவ்வளவு தான். பிடுங்கி எடுத்து விடுவாள். சரி என்று ஒரு கதை சொல்ல ஆரம்பித்தேன்.

சீதாவை ராவணன் கடல் தாண்டி கூட்டிண்டு போய்ட்டான். ராமா கடல் தாண்டி போவதற்காக எல்லா வானரங்களும் பாறைகளையும் பெரிய பெரிய கற்களையும் முதுகுல சுமந்தும் உருட்டிண்டு போயும் கடல்ல பாலம் கட்டித்து.

இத தூரத்துல இருந்த ஒரு அணில் கவனித்தது. உடனே ஓடி ஒரு வானரத்து பக்கம் வந்தது.

"சற்று தள்ளி போ. இந்நேரம் என் காலில் மிதிப்பட்டு செத்திருப்ப. என்ன வேண்டும் உனக்கு? ஏன் என் வழியில் குறுக்க வர?" என்று அந்த வானரம் கேட்டது.

"உனது வழியில் குறுக்கிட்டதற்காக என்னை மன்னிக்கனும். இங்கு என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க தான் நான் வந்தேன்." அந்த அணில் அமைதியாக சொன்னது.

உனக்கு விஷயம் தெரியாதா? தாய் சீதையை ராவணன் கடல் தாண்டி கொண்டு போய்ட்டான். ராமன் அங்க போறதுக்காக பாலம் கட்டிண்டு இருக்கோம்.

" அப்படியா விஷயம். நானும் ராமனுக்காக உதவி செய்யறேன்", அப்படின்னு சொல்லிட்டு அந்த அணில் ஒரு சின்ன கல்ல தூக்க முடியாம தூக்கி கீழே போட்டது. இத பாத்ததும் பக்கத்துல இருந்த வானரங்கள் எல்லாம் கெக்க புக்கனு சிரிச்சுது.

கொஞ்ச தூரத்துலேந்து ராமர் இத கவனிச்சுண்டு இருந்தாரு. உடனே அந்த அணில கைல தூக்கி வெச்சுண்டு "எனக்காக உதவி செய்யனும்னு நினைச்சியே, அதுவே ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொல்லி அந்த அணிலோட முதுக அன்பா தடவி விட்டாரு. ராமா ஒம்மாச்சி அணிலோட முதுகுல தடவி விட்ட இடத்துல அப்படியே மூன்று கோடுகள் பதிஞ்சுடுத்து" என்று சொல்லி கதையை முடித்தேன்.

"அப்பா என்ன கதை சொன்னா இப்போ? எனக்கு சொல்லு பாப்போம்" என் மனைவி கேட்டாள்.

அதுவா? வந்து, அப்பா மயில் ராமருக்கு உதவின கதைய சொன்னார்.

இது என்னடா புது கதையா இருக்கு என்று யோசிப்பதற்குள் என் மனைவி கேட்டாள்," மயில் கதையா? என் காதுல அணில் கதைன்னு தான கேட்டது? "

" ஆமாம் அம்மா. அப்பாக்கு கதையே தெரியல. மயில் கதைய போய் அணில் கதைன்னு மாத்தி சொல்லிட்டா." என்று அவள் ஒரு கதையை சொல்லி முடித்தாள்.

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...