Sunday, August 26, 2018

பத்தில் மூன்று ரூபாய்

ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு குகைக்குள் நுழைவது போல அந்த ரயில் விசாகபட்டிணம் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. புபனேஷ்வரில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் இன்னும் ஒரு நாள் பயணம் செய்து ராமேஷ்வரம் சென்று அடையும்.

"விசாகா பால்ல போட்ட டீ நன்றாக இருக்கும். வாங்கின்டு வரீங்களா?", அனன்யா கேட்டாள். ஆகாஷுக்கு  ரயில் டீ குடித்து நாக்கு செத்து விட்டது போல இருந்தது. ஒரு நல்ல டீ குடிக்க வேண்டும் என்று அவனுக்கும் ஆசை.

"ரயில் கண்டிப்பாக பத்து நிமிடம் நிற்குமல்லவா?" ஒரு முறைக்கு பத்து முறை டி.டி.ஆரிடம் கேட்டுக்கொண்டு இறங்கினான். சற்று நடந்து போனால் டீ கடை. கூட்டம் அலை மோதியது. ஒரு கண்ணால் ரயில் பெட்டியை பார்த்து கொண்டு ஓட்டமும் நடையுமாய் கடைக்கு சென்றான்.

"ரெண்டு டீ  குடுங்க...சீக்கிரம்" அவசரமாய் அவசரபடுத்தினான். ரயில் சென்று விடக்கூடாதே என்று அதில் ப்ரயாணம் செய்பவர்களுக்கு தானே கவலை? கடைக்காரருக்கு இல்லையே? அவர் மெதுவாக ஒவ்வொருவருக்கும் கொடுத்துக்கொண்டு இருந்தார். வாங்கியவர்கள் பத்து ரூபாய் தாளை கொடுத்து விட்டு வேகமாய் ரயிலை நோக்கி ஓடினார்கள். ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு ரயில் புரப்பட ஆயத்தமாகி இருந்தது.

ஆகாஷ் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் இரண்டு டீயை வாங்கி "எவ்வளவு பா?" என்று கேட்டவாறு பர்சில் சில்லரையை தேடினான்.

"இருவது ரூபாய்" என்று பதில் வந்தது. அவசர அவசரமாய் இரண்டு பத்து ரூபாய் தாளை தேடி எடுத்து குடுத்து விட்டு வேகமாய் ரயில் நோக்கி நகரும்போது அந்த விலை பட்டியல் அவன் கண்ணில் பட்டது. அதில் ஒரு டீ ஏழு ரூபாய் என்று எழுதி இருந்தது.

"பதினாலு ரூபாய் தானே? எங்கே பாக்கி சில்லறை?" என்று கேட்க நினைப்பதற்குள் அந்த அறிவிப்பு வந்தது.

 "Your kind attention please. Train no. 18496, Bhubaneswar Rameswaram express is ready to leave from Platform no. 3."

பல்லாயிரக்கணக்கான பயணிகளை போல் அவனும் அந்த பத்தில் மூன்று ரூபாயை பற்றி சிந்திக்காமல் ரயிலை நோக்கி விரைந்தான்.

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...