Monday, November 4, 2019

'வாழ நினைத்தால் வாழலாம்' கதை விமர்சனம்

தினமலர் வாரமலரில் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி வருடா வருடம் நடைபெறுகிறது. 32 வது அண்டான இவ்வருடம் 'வாழ நினைத்தால் வாழலாம்' என்ற சிறுகதைக்கு முதல் பரிசாக Rs.20,000 என்று அறிவித்தனர். சரி கதை எப்படி என்று பார்ப்போம்னு படிச்சேன். 
 
ஒரு ஸ்கூல் டீச்சர் +2 படிக்கும் மாணவ மாணவியரை பொதுத்தேர்வு முடிந்தவுடன் வீட்டிற்கு அழைத்து விருந்து உபச்சாரம் செய்வதாக கதை. எதற்கு என்றால் பொது தெரிவில் அவர்கள் வெற்றி பெறாவிட்டால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதை தடுப்பதற்காக என்று சொல்லி கதையை முடித்துள்ளார் கதையின் ஆசிரியர், திரு எம் ராமசாமி. நோக்கம் உயர்ந்தது தான். ஒரு ஆசிரியர் வெறும் பாடம் நடத்துவது மட்டுமே  தன் கடமை என்று இல்லாது தோல்வியுறும் மாணவர்களை தளர்வடைய விடாமல் மேலும் முனைப்போடு வெற்றிப்பாதையை நோக்கி நகர செய்வதும் தனது கடமையே என உணர்தல் மிக அவசியம். ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் தோல்வி அடைவதும், அதில் பலர் தற்கொலைக்கு முயல்வதும் வேதனையான ஒரு விஷயம். 
 
இங்கு யாரும் தோல்வியை விரும்புவதில்லை. உண்மை தான். அனால், விதி ஒரு சிலருக்கு வெற்றியை அவ்வளவு எளிதாக பரிசளிப்பதில்லை. தகுந்த வழிகாட்டி ஒவ்வொருவருக்கும் அவசியம், அதிலும் குறிப்பாக தோல்வியுறும் மாணாக்கர்களுக்கு மிக அவசியம். சரியான கதைக்கு முதல் பரிசளித்த தினமலர் பொறுப்பாசிரியருக்கு நன்றி.

No comments:

Post a Comment

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...