Sunday, July 22, 2018

முருகா உம்மாச்சி வந்துடமாட்டாளா?

"நமஸ்தே நரசிம்ஹாயா பாட்டு போடுப்பா, அப்போ தான் தூங்குவேன்" மழலை கொஞ்ஜலாய் மிரட்டியது.

"தூங்கர டைம் வந்தாச்சு. இப்போ அந்த பாட்ட கேட்டுட்டு நரசிம்ஹா உம்மாச்சி வந்துட்டா என்ன செய்யறது? பேசாம கர்னாடக சங்கீதம் கேட்டுட்டு தூங்கு", என்று சொல்லி சஞ்ஜெய் சுப்ரமணியத்தின் துன்பம் நேர்கையில் போட்டேன்.

மனம் ஒப்பவில்லை என்றாலும் பதில் பேசாமல் பாட்டை கேட்டுக்கொண்டிருந்தாள். அது முடிந்ததும் எப்போ வருவாரோ அடுத்த பட்டியலில் இருந்தது. தட்டினேன். அதுவும் முடிந்து போகவே, மதுரை சோமுவின் என்ன கவி பாடினாலும் கண்ணில் பட்டது. என்னை அறியாமல் கேட்க துவங்கினேன். முருகனை காணமுடியாத தவிப்பை ஒரு அற்புதமான பாடலாய் பாடியதை மெய் மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன். மழலை புரியாமல் பார்த்தாள்.

உடனே பூஜை அறைக்கு அழைத்துச் சென்று முருகனின் திருவுருவ  படத்தை காட்டினேன். "இது தான் முருகா உம்மாச்சி. எவ்வளவு அழகா இருக்கா பாத்தியா? இவர பத்தி தான் பாடறா" என்று விளக்கினேன்.

சற்று நேரம் என்னை உற்று நோக்கி, பின் கேட்டாள், "முருகா உம்மாச்சி வந்துடமாட்டாளா?"

பதில் பேசாமல் நமஸ்தே நரசிம்ஹாய பாட்டை போட்டேன்.

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...